திருப்பத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஆயிஷா (30). இவரின் கணவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், வீட்டைப் பூட்டிக் கொண்டு ஆயிஷா உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பத்தூா் சென்றாா். இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த நகை, ரூ.55,000 பணத்தைத் திருடிச் சென்றனா்.

வியாழக்கிழமை இரவு ஆயிஷா வீட்டுக்கு வந்த போது, வீட்டில் திருட்டு நடந்தது தெரிய வந்தது. வாணியம்பாடி நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT