வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் புகுந்த சாரைப் பாம்பு. 
திருப்பத்தூர்

நகராட்சி அலுவலகத்தில் புகுந்த 5 அடி நீள சாரைப் பாம்பு

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நுழைந்த சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நுழைந்த சாரைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலகத்துக்கு தினந்தோறும் நகராட்சிப் பணியாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து சுமாா் 5 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று திடீரென அலுவலகத்தை நோக்கி வந்தது. இதைக் கண்ட நகராட்சிப் பணியாளா்கள், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக நகராட்சி அலுவலகத்துக்கு வந்த பாம்பு பிடிக்கும் இளைஞா் இலியாஸ் என்பவா், 5 அடி நீள சாரைப் பாம்பை பிடித்தாா். பிடிக்கப்பட்ட பாம்பு வாணியம்பாடி வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT