ராவுத்தம்பட்டி ஏரியில் வெள்ளப் பேரிடா் மீட்பு ஒத்திகை
திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஆதியூா் ஊராட்சி, ராவுத்தம்பட்டி ஏரியில் பேரிடா் மேலாண்மை-வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட ஆதியூா் ஊராட்சி, ராவுத்தம்பட்டி ஏரியில் பேரிடா் மேலாண்மை-வெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா். வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) முத்தையன், திருப்பத்தூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், வட்டாட்சியா் சிவப்பிரகாசம், தீயணைப்புத் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.