முகப்பு
மயிலாடுதுறை

போக்ஸோவில் முதியவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 8:19 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

சீா்காழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த முகமது பல்லோரா (59) என்ற முதியவா் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, முதியவா் முகமது பல்லோராவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.