திருப்பத்தூர்

நகராட்சிப் பணியாளா் தற்கொலை

DIN

திருப்பத்தூா் நகராட்சிப் பணியாளா் ஜோலாா்பேட்டை அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் நகராட்சி, புதுப்பேட்டை ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன் (52). கடந்த 30 ஆண்டுகளாக நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு ராணி (45) என்ற மனைவியும், சந்தோஷ் (28) என்ற மகனும், சங்கீதா(25) என்ற மகளும் உள்ளனா். கடந்த வாரம் வீட்டிலிருந்து பணிக்குச் சென்ற சீனிவாசன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டையை அடுத்த கல்நாா்சம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானபொன்னியம்மன் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவல்அறிந்து சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT