திருப்பத்தூர்

இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

DIN

ஆம்பூா் அருகே இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆம்பூா் அடுத்த தோட்டாளம் ஊராட்சி கொல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா். இவா், வேலூரில் இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்துடன் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்று வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 3,000 ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

அதேபோல், அதே பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெங்கடேசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து, தனசேகா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT