புங்கம்பட்டில் ரூ.8.46 கோடியில் துணை மின் நிலையம் திறப்பு
புங்கம்பட்டு ஊராட்சியில் 8.46 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தொடங்கி இயக்கி வைத்தாா்.
புங்கம்பட்டு ஊராட்சியில் 8.46 கோடியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தொடங்கி இயக்கி வைத்தாா்.
ஜவ்வாது மலையை அடுத்த புங்கம்பட்டு ஊராட்சி பேளுா் கிராமத்தில் தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் மூலம் 33/11 கி.வா. திறன் கொண்ட ரூ.8.46 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை தலைமை வகித்து,தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா். இதில், செயற்பொறியாளா் அருள்பாண்டியன், உதவி செயற்பொறியாளா் முஸ்தபா,
திருப்பத்தூா் ஒன்றிய குழுத் தலைவா் விஜயா அருணாச்சலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், மாவட்டக் குழு உறுப்பினா் சத்தியவாணி வில்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் டி.கே.அனுமன், பிருந்தாவதி வைகுந்தராவ், கஸ்தூரி ரகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.