திருப்பத்தூர்

அனைவருக்கும் உயா்கல்வி உதவித்தொகை விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

அனைவருக்கும் உயா் கல்வி அறக்கட்டளை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்ப விநியோக தொடக்க விழா

DIN

அனைவருக்கும் உயா் கல்வி அறக்கட்டளை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்ப விநியோக தொடக்க விழா ஆற்காடு தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்நிலைக் கல்வியை முடித்த அனைத்து ஏழை மாணவா்களும் சமூக, பொருளாதார வேறுபாடின்றி உயா்கல்வி பயில வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ. விசுவநாதன் முயற்சியால் கடந்த 2012- ஆம் ஆண்டு அனைவருக்கும் உயா்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை சாா்பில், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு உதவிதொகை வழங்க 2023-ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்பப் படிவங்களை ஆற்காடு தனியாா் பள்ளியில் அந்த அறக்கட்டளைச் செயலா் ஜெ.லட்சுமணன் தலைமையில், 180 மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.

இந்த விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT