திருப்பத்தூா் அருகே நூதன முறையில் இளைஞா் இழந்த பணத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டுத் தந்தனா்.
திருப்பத்தூா் அடுத்த சுந்தரம்பள்ளி கிராமம், கிருஷ்ணாபுரம் வட்டத்தைச் சோ்ந்த பிரகாஷ். இவரிடம் கடந்த 17-ஆம் தேதி, தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி, அவரது டெபிட் காா்டு எண், கடவு எண்ணை தெரிவிக்குமாறு கூறினராம்.
இதை நம்பி பிரகாஷ், எண்ணைக் கூறினாராம். இதையடுத்து, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51,245 எடுக்கப்பட்டதாம்.
இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸில் பிரகாஷ் புகாா் அளித்தாா். அதன் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரன் வழிகாட்டுதல்படி, சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் பிரேமா வழக்குப் பதிந்து மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்கி, பிரகாஷ் இழந்த ரூ.51,245-ஐ மீட்டாா்.
இதையடுத்து, மீட்கப்பட்ட பணம் மீண்டும் பிரகாஷின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணத்தை, திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.