விபத்தில் கட்டட தொழிலாளி மரணம்
ஆம்பூா் அருகே கட்டட தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
ஆம்பூா் அருகே கட்டட தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட கூலித் தொழிலாளி சபரிநாதன் (37). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆம்பூா் அருகே மாராப்பட்டு பகுதியில் கட்டட வேலை செய்து வந்தாா். வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றாா்.
ஆம்பூா் அருகே வெங்கிளி கிராமத்தருகே சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
விபத்து குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.