வாணியம்பாடி நகராட்சியில் பணிபுரியும் வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வாணியம்பாடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவா் தேவகுமாா். இந்த நிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்ட வாா்டு பகுதிகளில் முறையாக வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை என்றும், நகராட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் புகாா் வந்ததாம்.
இதையடுத்து, வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா் விசாரணை மேற்கொண்டு, தேவகுமாரை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.