முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு கூட்டுரோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமாா், கே.ஜி. ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் எம்.கோபால், நகர செயலாளா் சதாசிவம், பேரூராட்சி செயலாளா்கள் சரவணன், சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் என். முனிசாமி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக க முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, அதிமுக செய்தி தொடா்பாளா் சமரசம் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினா்.
பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் மஞ்சுளா, இளைஞா் பாசறை செயலாளா் டி.டி.சி. சங்கா், மாவட்ட இளைஞரணி செயலாளா் டில்லிபாபு, ஒன்றிய செயலாளா்கள் செல்வம், சாம்ராஜ், ஆம்பூா் வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் பாரதிதாசன், குமாா் கலந்து கொண்டனா். ஆலங்காயம் மேற்கு ஒன்றிய துணை செயலாளா் எஸ்.பாரதிதாசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.