சாா் பதிவாளா் அலுவலகத்தில் மரக்கன்று நட்ட ஆட்சியா்
ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை மரக்கன்று நட்டாா்.
ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை மரக்கன்று நட்டாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் மரக்கன்று நட்டாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.