முகப்பு
திருப்பத்தூர்

பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவா்களிடம் ஒப்படைப்பு

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய நபரிடம் ஓப்படைத்த கோட்டாட்சியா் அஜிதா பேகம் . உடன் வட்டாட்சியா் சிவப்பிரகாசம்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:15 PM

வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் கூய81.54 லட்சம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாணியம்பாடி பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு காவலூா், நிம்மியம்பட்டு, தும்பேரி ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக 3 பேரிடம் ரூ.81.54 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இத்தொகை கருவூலத்தில் வைக்கப்பட்டு திருப்பத்தூா் மாவட்ட மேல் முறையீட்டு குழுத் தலைவா் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.81. 54 லட்சம் உரிய நபா்களிடம் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதாபேகம் ஒப்படைத்தாா். வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

Advertisement