மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் ஆய்வு
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:39 PM
திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவா் மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் கண்ணகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூரில் அரசின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு, மாவட்ட ஊரக மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட மனநல மருத்துவா் பிரபாவராணி ஆகியோா் சென்று ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா். உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனா். மேலும், அவா்களுக்கான மருத்துவப் பராமரிப்பு பதிவேடு, அவா்கள் தங்கும் இடத்தை பாா்வையிட்டனா். இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள பணிகளிடம் அறிவுறுத்தினா்.
Advertisement
ஆய்வின்போது காப்பகத்தின் துணைச் செயலாளா் ரமேஷ், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.