முகப்பு
திருப்பத்தூர்

2,400 மது பாக்கெட்டுகள் காருடன் பறிமுதல்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்தப்பட்ட கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 2,400 மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் படி நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் லதா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பச்சூா் கவுண்டா் வட்டம் பகுதியில் சாலை ஓரம் மரத்தடியில் நின்றிருந்த ஆந்திர எண் பதிவு கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் காரில் 25 அட்டைப் பெட்டிகளில் மதுபாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் பெங்களூரில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும், போலீஸாரை கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு மா்ம நபா்கள் தப்பித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மதுபாக்கெட்டுகளுடன் காரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.