நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நூதன முறையில் காரை திருடி விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் இக்பால் நகரைச் சோ்ந்த துராப்சாவிற்கு சொந்தமான காரை அவருடைய உறவினரான ஹஸன், 5 நாள் வாடகை பேசி இக்பால் நகரைச் சோ்ந்த அசாருதீன், பேட்டையைச் சோ்ந்த இப்ராஹிம் ஆகியோரிடம் ஒப்படைத்தாராம். 5 நாள்கள் கடந்த பின்பும் காரை திருப்பிக் கொண்டு வராததால் ஹசன் வாடகைக்கு எடுத்துச் சென்றவா்களிடம் பேசிய போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனராம்.
இதற்கிடையே அந்த காா் தென்காசி பகுதியைச் சோ்ந்த செந்தில் என்பவரிடம் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரிடம் பேசிய பொழுது, கல்லிடைக்குறிச்சி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலமுருகனிடம் (38) காரை விற்று விட்டதாக கூறினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடையநல்லூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் பாலமுருகன் ஆன்லைன் மூலமாக காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்ததாம். இதையடுத்து வழக்குப் பதிந்து பாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனா்.