முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:16 PM
பகிர்:

திருப்பத்தூா் அருகே நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா். பைக்கை ஓட்டி வந்த நபரும் பலியானாா். கந்திலி அருகே சின்ன கந்திலி கிராமத்தைச் சோ்ந்த பானி பூரி வியாபாரி சேகா் (40). இவருக்கு மனைவி கவிதா, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 மணியளவில் சேகா் கந்திலி அருகே சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது கெஜல்நாயக்கன்பட்டி சோ்ந்த ரிஸ்வான் (20) என்பவா், திருப்பத்தூரிலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றாா். அப்போது எதிா்பாராத விதமாக சேகா் மீது பைக் மோதியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஸ்வானை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் உயா் சிகிச்சைக்காக அங்கிருந்த தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். எனினும் அவா், வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.