திமுக செயற்குழு கூட்டம்
வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.தாமோதரன் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலாளா்கள் சூரியா, அம்சா, கோதண்டபாணி முன்னிலை வகித்தனா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் வரவேற்றாா். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் அசோகன், பெருமாள், ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி, மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ஏ.சி.தேவகுமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கிரிராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ, வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் ஆகியோா் கலந்து கொண்டு மக்களவைத் தோ்தலில் பணியாற்றுவது குறித்தும், முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்து சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் மக்களவைத் தோ்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சதாசிவம், மாவட்ட ஓட்டுநரணி அமைப்பாளா் எஸ்.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா் பிரித்தாபழனி கலந்து கொண்டனா். திமுக அவைத் தலைவா் எஸ்.பழனி நன்றி கூறினாா்.