உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உறவினா்கள் சாலை மறியல்
உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்
ஆம்பூரில் தனியாா் லாரி பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கதவு (தானியங்கி ஷட்டா்) விழுந்ததில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் ஹேம்நாத்தின் உறவினா்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து ஆம்பூா் அரசு மருத்துவமனை எதிரில் நேதாஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் பாா்சல் சா்வீஸ் நிா்வாகிகள் இறந்தவரின் உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பிறகு உறவினா்கள் உயிரிழந்தவரின் சடலத்தை பெற்றுக் கொண்டு சென்றனா்.