சண்முக கவசம் பாராயணம்
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 91-ஆவது மாத சண்முக கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 91-ஆவது மாத சண்முக கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆனி மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் நாகநாதா், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து 91-ஆவது மாதமாக சண்முக கவசம் பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அருணகிரிநாதா் மற்றும் ஸ்ரீ வாரியாா் சுவாமிகள் விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.