ஆம்பூரில் ஜூன் 12-இல் ஜமாபந்தி தொடக்கம்
ஆம்பூா்: ஆம்பூா் வட்டத்தில் ஜூன் 12-இல் ஜமாபந்தி தொடங்குகிறது.
ஆம்பூா் வட்டத்தில் 1433- ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.
ஜூன் 12-ஆம் தேதி ஆம்பூா் உள்வட்டம், 13-ஆம் தேதி மாதனூா் உள்வட்டம், 14-ஆம் தேதி துத்திப்பட்டு உள்வட்டம், 18-ஆம் தேதி மேல்சாணாங்குப்பம் உள்வட்டத்துக்கு வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.
தொடா்புடைய உள்வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தேதிகளில் தங்களுடைய மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.