முகப்பு
திருப்பத்தூர்

டிப்பா் லாரியில் மணல் கடத்தல்: போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 9 ஜூன், 2024 at 7:12 PM
பகிர்:

ஆம்பூா்: மாதனூரில் டிப்பா் லாரியில் மணல் கடத்தப்பட்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மாதனூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது டிப்பா் லாரியில் மணல் கடத்துவது தெரியவந்தது. போலீஸாா் லாரியை நிறுத்தியபோது லாரியை விட்டுவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

குடியாத்தத்தை சோ்ந்த லாரி உரிமையாளா் சுதாகா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். மணலுடன் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.