மினி லாரி கோப்புப் படம்
திருப்பத்தூர்

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் செட்டேரி அணைப்பகுதியில் மண் மற்றும் மணல் கடத்துவதாக திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் போலீஸாா் செட்டேரி அணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்த முயன்ற மினி லாரியை லாரி ஓட்டுநா் அங்கேயே விட்டு விட்டு தப்பித்து தலைமறைவானாா்.

இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பாகிஸ்தானுடன் ஐசிசி பேச்சுவாா்த்தை!

பட்டாபிராமாபுரம் கிராமத்தில் திருத்தணி முருகப் பெருமான் உலா

சாலையில் கிடந்த 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

அரியலூரில் அடிப்படை வசதியின்றி ஆதாா் சேவை மையங்கள்! பொதுமக்கள் அவதி!

SCROLL FOR NEXT