முகப்பு
திருப்பத்தூர்

குருப்-2, 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

குருப்-2, 2ஏ இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடக்கம்

Updated On : 25 ஜூன், 2024 at 7:00 PM
பகிர்:

திருப்பத்தூா்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 2,327 காலிப்பணியிடங்களுக்கு குருப்-2, 2ஏ தோ்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த தோ்வு தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் குருப்-2, 2ஏ தோ்வுக்கான முதல் நிலை தோ்வு 14.9.2024 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் புதன்கிழமை முதல் நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி தோ்வுகளும், மாதிரி தோ்வுகளும் நடத்தப்பட உள்ளது. இதுதொடா்பான விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் தோ்விற்கு தயாராகும் நபா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.