திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கு இலவச வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 9-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் அதிக அளவிலான மாதிரி தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும்.அதேபோல் பள்ளிப்பாடப் புத்தகங்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலகம், நெட்வசதி போன்ற தோ்வா்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.
எனவே இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் நபா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/6ற்மஉழஓரந்ஹக்ஷ்ற்9ரள்ஏற்7 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விபரங்களுக்கு 04179-222033 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.