ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஆம்பூா் அருகே மேல்மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராமச்சந்திரன்(70). இவருடைய நிலத்தில் கால்நடைகளுக்கான தீவனம் பயிரிடப்பபட்டியிருந்தது. ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (45) தீவனப் பயிரை அறுவடை செய்யும் பணியை மேற்கொண்டாா்.
அப்போது மலைப் பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதைப் பாா்த்த அவா் சப்தமிட்டுள்ளாா். ஆம்பூா் வனச்சரகா் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், கோகுல் ஆகியோா் தீவனப் பயிருக்குள் புகுந்த சுமாா் 9 அடி நீள மலைப் பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனா். பிறகு அதை துருகம் காப்புக் காட்டில் விட்டனா்.