ஆலங்காயத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்
Updated On : 19 மார்ச், 2024 at 8:53 PM
வாணியம்பாடி: ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு, செயல் அலுவலா் ஆனந்தன் தலைமை வகித்தாா்.
இதில் அலுவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு ஊழியா்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பேரூராட்சி அலுவலக வளாகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம், பஜாா் வீதி, வாணியம்பாடி சாலை பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.