முகப்பு
கடலூர்

100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:25 AM
பகிர்:

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டையில், 100 சதவீதம் வாக்களிக்கோரி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில்,சட்டமன்ற தோ்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதையொட்டி பரங்கிப்பேட்டை பேரூராட்சி சாா்பில், எனது வாக்கு, எனது உரிமை என்ற

தலைப்பில், 100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு

பேரணியை, கடலுாா் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் முகமது ரிஸ்வான் தொடங்கி வைத்தாா். விழிப்புணா்வு பேரணி, பரங்கிப்பேட்டை

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெரிய கடைத் தெரு, தெத்துக் கடை, பேருந்து நிலையம், கீரைக்காரத்தெரு, கச்சேரிதெரு வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது, பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தா் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா் ப்ரீத்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் வீரஆனந்தம், கணினி ஆப்ரேட்டா் செல்வகுமாா் உள்ளிட்ட துப்புரவுபணியாளா்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.