தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னா், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், வேலூா் மக்களவைத் தொகுதி செலவின மேற்பாா்வையாளா் அமித்கோயல் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமுதன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement