முகப்பு
திருப்பத்தூர்

ஓய்வு பெறும் நாளில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா் சஸ்பென்ட்

Updated On : 1 மே, 2024 at 5:58 PM
பகிர்:

ஓய்வு பெறும் நாளில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆம்பூா் நகராட்சி துப்புரவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவா் தசரதன். இவா் ஏப்.30-ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது நகராட்சிக்கு வரியினங்களை சரிவர வசூலிக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி அவா் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.