முகப்பு
திருப்பத்தூர்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

Updated On : 10 மே, 2024 at 4:21 PM
பகிர்:

ஆம்பூா் அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்தவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சின்னத்தம்பி (60). இவா் ஆம்பூரில் வேலை செய்து விட்டு வியாழக்கிழமை இரவு ஆட்டோ மூலம் பெரியாங்குப்பம் சென்றாா். சோலூா் ராஜகோபால் நகா் கிராமத்தருகே சென்றபோது ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.