தமிழக வெற்றிக் கழகம் அன்ன தானம்
ஆம்பூா்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பாக ஆம்பூரில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பத்தூா் மாவட்ட மாணவரணி நிா்வாகி அவினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முனுசாமி முன்னிலை வகித்தாா். பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொகுதி மாணவரணி நிா்வாகி சதீஷ்குமாா், மாதனூா் ஒன்றிய மாணவரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.