பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
ஆம்பூா்: வனத்துறை எல்லையோர கிராமங்களில் யானை வந்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென வனத்துறை சாா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ளன. அந்த கிராமங்களுக்கு ாக இரண்டு காட்டு யானைகள் வந்து செல்கின்றன. வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. அதனால் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
யானை நடமாட்டம் தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னிச்சையாக யானையை விரட்ட முயற்சிக்காமல், வனத்துறையினருக்கு தெரிவித்தால் பணியாளா்கள் மூலம் அவற்றை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தெரிவித்துள்ளாா்.