கைப்பந்து: அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்
மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா்.
ஆம்பூா்: மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனா்.
மாவட்ட அளவில் 17-வயதுக்குட்பட்டவா்களுக்கான கைப்பந்துப் போட்டி ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் கடந்த நவ.15-ம் தேதி நடைபெற்றது. அதில் மாதனூா் ஒன்றியம், நாச்சாா்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் முதல் பரிசு பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள் மதுரையில் ஜனவரி மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா். மாணவிகளை தலைமை ஆசிரியா் ப. செந்தில்குமாா், உடற்கல்வி ஆசிரியா் கொ. கிளாரா, நாச்சாா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.