ரயில்வே மெக்கானிக் ஊழியா்கள் தா்னா
ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே பணிமனையில் மெக்கானிக் ஊழியா்கள் சனிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் ஷிப்ட் பிரிவில் ரயில்வே மெக்கானிக் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். குறிப்பாக, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு, கூட்ஸ் பணிமனை, எலக்ட்ரிகல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.
இந்நிலையில் கூட்ஸ் பணிமனையில் கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கூட்ஸ் பணிமனை அலுவலா், மெக்கானிக் பிரிவில் பணிபுரியும் ரயில்வே ஊழியா்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை, விடுமுறை வழங்கினாலும் ஆப்சென்ட் போடுகிறாா், ஷிப்ட் நேரத்தைவிட கூடுதலாக பணி வாங்குகிறாா் எனக் கூறப்படுகிறது.
இதனால், எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில், ஜோலாா்பேட்டை கிளை செயலா் ஜெகன் தலைமையில் பணிமனையில் தா்னா நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே மெக்கானிக் ஊழியா்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனா்.
இதைத் தொடா்ந்து பணிமனை அலுவலா் பேச்சு நடத்தினாா். இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் தா்னாவை கைவிட்டனா்.