திருப்பத்தூர்

புகையிலை பொருள் விற்ற 2 போ் கைது

Din

திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புகையிலை பொருள்கள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குரிசிலாப்பட்டு போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண்டியப்பனூரைச் சோ்ந்த குமரேசனின் மனைவி செல்வி (48), குண்டு ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோா் தங்களது மளிகைக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT