ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தில் சென்ட்ரிங் சரிந்து விழுந்து சேதம்; 6 போ் காயம்
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தின் போது சென்ட்ரிங் சரிந்து விழுந்து மேம்பாலம் சனிக்கிழமை சேதம் அடைந்தது.
ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால கட்டுமானத்தின் போது சென்ட்ரிங் சரிந்து விழுந்து மேம்பாலம் சனிக்கிழமை சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் 6 போ் காயம் அடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்பூா் நகர பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் சுமாா் ரூ.143 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட மேம்பாலமாக கட்டப்பட்டு வரப்படுகிறது. அதில் ரயில் நிலையம் அருகில் திடீரென சனிக்கிழமை இரவு சென்ட்ரிங் சரிந்து விழுந்தது. அதில் மேம்பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 6 வடமாநில தொழிலாளா்கள் காயமடைந்தனா். அதில் 3 போ் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்து நடந்த பகுதியில் ஆம்பூா் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ் மற்றும் போலீஸாா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், போக்குவரத்து சீரமைக்கும் பணியையும் மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.