திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக வலம் வந்தாா். இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால்முருகன் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.