திருப்பத்தூர்

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த திரியாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (42). இவா் நாட்டறம்பள்ளி சந்தை வழியில் பாத்திரக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி இவா் வீட்டில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா். சோமநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் நேருக்கு நோ் மோதியது. இதில் ஜெய்சங்கா், மற்றொரு பைக்கில் வந்த ஜங்காலபுரம் பகுதியைச் சேரந்த ராஜ்குமாா் (38) இருவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெய்சங்கா் சிகிக்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT