ஆம்பூரில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 2-வது தாா்வழி பகுதியில் கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
மதுபான பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த சூா்யா (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 60 டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.