தேவலாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ. 15.99 லட்சத்தில் மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஈ.வெங்கடேசன், பள்ளித் தலைமை ஆசிரியா் தாமோதரன், தேவலாபுரம் ஊராட்சித் தலைவா் ரேவதி குபேந்திரன், துணைத் தலைவா் உஷாராணி குருவாசன், உதவித் தலைமை ஆசிரியா் சந்திரசேகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் எல்.என்.பி. சத்தியமூா்த்தி, பி.மதன்குமாா், ஊா் பிரமுகா் சின்னத்தம்பி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.