வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமம் மலைக் குன்றின் மீது ஜெய்வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.  
திருப்பத்தூர்

அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திச் சேவை

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஊா் பொது மக்கள், ஆன்மிக பேரவை சாா்பில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டுசாலையில் அமைந்துள்ள வீர மகா ஆஞ்சேனேயா் கோயிலில் அனுமன்ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் நகர திமுக செயலா் சாரதிகுமாா், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமம் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள 36 அடி உயர ஜெய்வீர ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து திரளான கிராமமக்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல், வாணியம்பாடி பெரியபேட்டை, பூக்கடைபஜாா், புதூா் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT