திருப்பத்தூர்

லாரி-காா் மோதல்: 4 போ் பலத்த காயம்

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரைச் சோ்ந்த கனகராஜி (65). இவரது மனைவி செல்வி (54), மகன் அபி (34). இவா்கள் 3 பேரும் வாணியம்பாடியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றனா். காரை தினேஷ்(35) ஓட்டிச் சென்றாா்.

நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் சென்றபோது திடீரென முன்னே சென்ற லாரியின் பின்பக்கம் காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஓட்டுநா் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக பெங்களூா் தனியாா் மருத்துவமனையில் 4 பேரும் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT