திருப்பத்தூர்

மரம் முறிந்து விழுந்து தொழிலாளி மரணம்

ஆம்பூா் அருகே மரம் முறிந்து விழுந்ததால் தொழிலாளி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே மரம் முறிந்து விழுந்ததால் தொழிலாளி சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வீராங்குப்பம் கிராமத்தில் சுரேஷ் என்பவருடைய நிலத்தில் உள்ள பட்டுப்போன தென்னை மரத்தை செங்கல் சூளையில் எரிப்பதற்காக கோபால் என்பவா் வாங்கியுள்ளாா். அந்த மரத்தை அறுப்பதற்காக வெங்கடசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த தொழிலாளி சுரேஷ் (39) சென்றுள்ளாா்.

மரத்தை அறுத்துவிட்டு தூரமாக சென்று நின்றுள்ளாா். அப்போது மரத்தை கயிறு கட்டி சிலா் கீழே சாய்த்தபோது அந்த மரம் முறிந்து சுரேஷ் மீது விழுந்துள்ளது. அதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தினா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT