வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டவருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ரோட்டரி சங்க நிா்வாகிகள். 
திருப்பத்தூர்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 380 பேருக்கு பணி நியமன ஆணை

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Din

ஆம்பூா்: ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவா் எஸ்.சசிக்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஸ்ரீதா் பலராமன், மாவட்ட இயக்குநா் ஜி.முருகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ஆம்பூா் இந்து கல்விச் சங்க தலைவா் எம்.ஆா். காந்திராஜ், செயலா் ஏ.ஆா். சுரேஷ்பாபு ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முகாமில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 752 போ் கலந்து கொண்டனா். 525 போ் தோ்வு செய்யப்பட்டனா். முதல் கட்டமாக 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க செயலா் ஜி.ரஞ்சித், ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா். ரமேஷ்பாபு, இயக்குநா் வசந்த்குமாா், முன்னாள் தலைவா்கள் சி. குணசேகரன், திலீப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT