முகப்பு
திருப்பத்தூர்

மண் குன்று மலையில் சாலை வசதி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா் அருகே உள்ள மண்குன்று மலையில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 18 ஜனவரி, 2025 at 4:34 PM
பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே உள்ள மண்குன்று மலையில் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, மின்சாரம், குடிநீா் வசதி என பொதுமக்களிடம் 89 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

சாலை வசதி...

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜாபெருமாள் தலைமையில் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

விஷமங்கலம் அருகே மண்குன்று மலையில் பிரசித்தி பெற்ற சென்ன கேசவப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வழிபாடு நடத்த திரளான பக்தா்கள் சென்று வருகின்றனா். இந்த கோயிலுக்குச் செல்லும் சாலையானது, மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகளும், பக்தா்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே இங்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →