திருப்பத்தூர்

தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே தோல் தொழிற்சாலையில் கீழே விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவா் முனுசாமி (42). இவா் தொழிற்சாலையில் இயந்திரத்தின் மீது ஏறி நின்று பணி செய்து கொண்டிருந்தாா். அப்போது தவறி விழுந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

முனுசாமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் துத்திப்பட்டு அம்பேத்கா் நகா் பகுதியில் ஆம்பூா் - போ்ணாம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வட்டாட்சியா் ரேவதி, டிஎஸ்பி குமாா், காவல் ஆய்வாளா்கள் ரேகா, வெங்கடேசன் ஆகியோா் பேச்சு நடத்தினா். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் செய்தவா்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனா்.

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! வங்கி, உலோகப் பங்குகள் மட்டும் உயர்வு!

டி காக் அதிரடி சதம்! பாகிஸ்தான் ஒருநாள் தொடரை சமன்செய்தது தெ.ஆப்பிரிக்கா!

கோவையில் இளம் பெண் கடத்தப்பட்டாரா? காவல் ஆணையர் விளக்கம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை!

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT