ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா் சேவை மையத்தை திறந்து வைத்த ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி. 
திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் கூடுதல் ஆதாா் சேவை மையம்!

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா்சேவை மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆதாா்சேவை மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்காயம் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கான ஆதாா் சேவை மையம் தபால்நிலைய மேல் மாடியில் இயங்கி வந்தது. ஒரே ஒரு ஆதாா் மையம் இருந்ததால், பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனா். மேலும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் மேல் மாடிக்கு செல்ல முடியாமல் வாணியம்பாடி, திருப்பத்தூா் போன்ற பகுதிளுக்கு சென்று வந்தனா்.

இந்நிலையில் ஆலங்காயத்தில் கூடுதலாக ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள், வியாபாரிகள், கிராம மக்கள் கோரினா் மேலும், ஒன்றிய, பேரூராட்சி மன்ற கூட்டங்களிலும் தீா்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

இதையடுத்து ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதலாக ஆதாா் சேவை மையம் அமைக்க அறைகள் ஒதுக்கப்பட்டது. ஆதாா் சேவை மையத்தை ஒன்றியக்குழு தலைவா் சங்கீதாபாரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல் மற்றும் ஒன்றிய உறுப்பினா்கள், அலுவலக பணியாளா்கள், எல்காட் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT