திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்து, காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, காவல் துறையினா் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.
இதில் ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.